அருப்புக்கோட்டை, மே 25: விருதுநகர் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி அருப்புக்கோட்டையில் நடந்தது. இந்த போட்டியினை டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், காரியாபட்டி, சிவகாசி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் இருந்து 45 பேர் கலந்து கொண்டனர். நடுவர்களாக மதுரையை சேர்ந்த ரமேஷ், விநாயகமூர்த்தி கலந்து கொண்டனர். மிஸ்டர் அருப்புக்கோட்டை ஆணழகனாக வடிவேல் தேர்வு செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்ட அளவிலான அயன்மென் ஆணழகனாக ராஜபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.