புதுக்கோட்டை, மே 25: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் கடந்த 1967ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரையால் வேளாண் விரிவாக்க மையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த வேளாண் விரிவாக்க மையம் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், பயறு வகை பயிர்கள், நெல் விதைகள், உளுந்து வகைகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்கி வந்தது. மேலும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள், மானிய விலையில் வேளாண் பொருட்கள், உரம், பூச்சி மருந்து ஆகியவை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த வேளாண் விரிவாக்க மையம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் திருவரங்குளம் பகுதி விவசாயிகளுக்கு எந்த பொருட்களும் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது.