சீர்காழி, மே 25: சீர்காழி சட்டநாதபுரத்தில் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்ததால் அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் தெற்கு தெருவில் சுமார் 700 மீட்டர் தூரத்திற்கு சாலைகள் முழுவதும் ஜல்லி பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.