நாமக்கல், மே 25: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்றார். இந்த வெற்றியை, நாமக்கல் மாவட்டத்தின் பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.