மது பாட்டில்கள் பறிமுதல்

திருமங்கலம், மே 25: திருமங்கலம் அருகே வீட்டில் மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து 12 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருமங்கலத்தை அடுத்துள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் அங்கம்மாள் (48). இவர் வீட்டில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சிந்துபட்டி எஸ்ஐ ராமநாதன் தலைமையில் போலீசார் சென்று அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் 12 மதுபாட்டில்கள் இருந்தன. பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அங்கம்மாளை கைது செய்தனர்.

Related Stories: