கந்தர்வகோட்டையில் டூ வீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

கந்தர்வகோட்டை, மே 24: கந்தர்வகோட்டை சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் ராமு என்கிற ராம்குமார் (25). மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நெப்புகை சூல பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் கந்தர்வகோட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். நெப்புகை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த ராம்குமார் பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: