புதுக்கோட்டை, மே 23: கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாட்டால் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் வாழை மரங்கள் காய்ந்து கருகி வருகிறது. எனவே நஷ்டஈடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் மின்மோட்டார் பாசனத்தை கொண்டு வாழை சாகுபடி செய்துள்ளனர்.கடந்தாண்டு டிசம்பர் மாதம் வாழைக்கன்று நட்டு வரும் ஜூலை மாதம் இறுதியில் வாழைதார்களை அறுவடை செய்வர். பல ஆண்டுகளாக ஆறு, வாய்க்கால்களில் போதுமான தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் பெருமளவு வாழை விவசாயிகள், சொட்டுநீர் பாசனத்தை கொண்டு சாகுபடி செய்துள்ளனர்.ஆனால் மின்மோட்டாரில் போதுமான தண்ணீர் வராததாலும், சொட்டுநீர் பாசனத்துக்காக போடப்பட்ட குழாய்களை தரமானதாக அமைக்காததால் தண்ணீர் வாழை கன்றுகளுக்கு செல்லாமல் நடவு செய்யப்பட்ட அனைத்து கன்றுகளும் கருகிவி–்ட்டன.இதனால் ஒரு ஏக்கருக்கு செலவு செய்த தொகை வீணாகியுள்ளது. எனவே தமிழக அரசு, வாழைகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வரை நஷ்டஈடு வழங்க வேண் டும். தவறும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளை திரட்டி போராட்டம் செய்யப்படும் என வாழை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து வாழை விவசாயி ஆறுமுகம் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் குறைவான தண்ணீரை கொண்டு சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை சாகுபடி செய்ய தோட்டக்கலையை சேர்ந்த அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர்.