இளையான்குடி, மே 23: இளையான்குடி அருகே ஊரணியில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அடித்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இளையான்குடி அருகே பகைவரைவென்றானை சேர்ந்தவர் குமார் மகன் விக்னேஷ்(22). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், சக டிரைவர்களுடன் தாயமங்கலத்தில் உள்ள ஊரணியில் குளிக்கச் சென்றார். அப்போது சிறிது நேரத்தில் விக்னேஷ் இறந்துவிட்டதாக இளையான்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. விக்னேஷின் உடலை கைப்பற்றிய போலீசார், இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.