சீர்காழியில் அனுமதியின்றி வயலில் மண் எடுத்த 2 வாகனங்கள் பறிமுதல்

சீர்காழி, மே 23: சீர்காழி பிச்சைக்கார விடுதி பகுதியை சேர்ந்தவர் மணி (46). இவருக்கு சொந்தமான வயலில் அனுமதிபெறாமல் ஜெசிபி இயந்திரத்தை பயன்படுத்தி மண் எடுப்பதாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சீர்காழி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அனுமதியின்றி மண் எடுத்துக் கொண்டிருந்த டிராக்டர், டிப்பர், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஓட்டுனர் கீழதென்பாதியை சேர்ந்த ஜெயகாந்தனை கைது செய்தனர். மேலும் பிச்சைகார விடுதியை சேர்ந்த மணி, கோவிலான் தெருவை சேர்ந்த ஓட்டுனர் வினோத் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: