சிறப்பு அலங்காரத்தில் யாழ்முறிநாதர் சீர்காழி அருகே நாங்கூரில் பாதுகாப்பற்ற நிலையில் மாணவர் விடுதி சீரமைக்க கோரிக்கை

சீர்காழி, மே 23: சீர்காழி அருகே நாங்கூரில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மாணவர் விடுதியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சீர்காழி அருகே நாங்கூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த விடுதி கட்டிடம் பல்வேறு இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் விடுதி கட்டிடம் அமைந்துள்ள பகுதிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் விடுதி அமைந்துள்ள பகுதிகளில் சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மாணவர்களின் நலன் கருதி சிதிலமடைந்த கட்டிடத்தை சரி செய்து மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கவும், சுற்றுச் சுவர் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: