தொண்டி, மே 23: முள்ளிமுனை கடற்கரை கிராமத்தில் மீனவர்களிடம் தேர்தல் தகராறு, கோவில் உள்ளிட்ட பல முன்விரோதம் காரணமாக அடிக்கடி பிரச்னை நடைபெற்று வருகிறது. இதனால் கோவில் திருவிழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமம் முற்றிலும் மீனவர்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு கோவில் திருவிழா நடத்துவது, தேர்தல், கிராமத்தலைவர் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கில் இரு தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.