ஐடி கம்பெனி ஊழியர் மாயம்

பண்ருட்டி, மே 23: பண்ருட்டி அருகே பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பாரிவள்ளல் (28). பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோகிணி (25). இவர் கணவர் வேலைபார்க்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக தம்பதி இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரிவள்ளல் ஊருக்கு வந்தபோது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. பின்னர் வெளியே சென்று வருவதாக கூறிசென்ற பாரிவள்ளல் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. கம்பெனிக்கும் செல்லவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் அவரைபற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது மனைவி ரோகிணி காடாம்புலியூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பாரிவள்ளலை தேடி வருகின்றனர்.

Related Stories: