கடையின் கூரையை பிரித்து பணம், செல்போன் திருட்டு

சேலம், மே 22: சேலத்தில் இரும்பு கடையின் மேற்கூரையை பிரித்து பணம், செல்போனை திருடிய கோரிமேடு வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் கிச்சிப்பாளையம் காந்திமகான் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (60). பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவர் கடந்த 15ம் தேதி வேலை முடித்து கடையை பூட்டிவிட்டு  வெளியூருக்கு சென்றுள்ளார். நேற்று கடையை திறக்க வந்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, கடையில் வைத்திருந்த ₹7,000 பணம் மற்றும் செல்போன் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து பழனிசாமி கிச்சிப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். ஆய்வில் மர்ம நபர் ஒருவர் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மர்ம நபர் குறித்து விசாரித்தில் அவர் கோரிமேட்டினை சேர்ந்த தவசி என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து செல்போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: