காரைக்குடி, மே 22: காரைக்குடியில் வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் சார்பில் மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் நினைவேந்தல் கூட்டம் மற்றும் முடியரசன் கவிதைகளில் முனைவர் பட்டம் பெற்றோருக்கு பாராட்டு விழா நடந்தது. எழுத்தாளர் பாரிமுடியரசன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் தலைமை வகித்தார். திருச்சி அனைத்துலகத் தமிழ் மாமன்றத் தலைவர் யோகநாதன், அழகப்பா பல்கலைக்கழக தமிழ் பண்பாட்டு மைய இயக்குநர் செந்தமிழ்ப்பாவை உள்பட பலர் கலந்து கொண்டனர்.