மாரிகுளம் சுடுகாடு சீரமைப்பு குழு கூட்டம்

தஞ்சை, மே 22: தஞ்சை அருகே மாரிகுளம் சுடுகாடு சீரமைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் 10வது வார்டு பொதுமக்கள், 3 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் மாரிகுளம் சுடுகாட்டை சீரமைத்து கல்லறை தோட்டமாக அழகுப்படுத்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது. பராமரிப்பு பணிகளை உடனடியாக செயல்படுத்த 2 பணியாளர்கள் நியமித்து அவர்களுக்கு மாத ஊதியம் வழங்குவது. மாரிகுளத்தை சுற்றி விடுப்பட்ட வடக்கு, மேற்கு சுவர்களை கட்ட முயற்சி செய்வது. மாரிக்குளத்தை சீரமைத்து தண்ணீர் தேக்க வழி செய்வது. குளத்தை சுற்றியும், உள்ளேயும், வெளியேயும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பழைய துணிகள் கழிவு சேராமல் சுத்தமாக பாதுகாப்பது. மாரிக்குளத்தில் கூடுதல் எல்இடி விளக்குகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: