வேதாரண்யம், மே 22: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலய பகுதிக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கோடியக்கரை சரணாலய பகுதிகளில் உள்ள வனவிலங்குகளுக்கு தற்போது தண்ணீர் தட்பாட்டை போக்குவதற்கு நாள்தோறும் 15 ஆயிரம் லிட்டர் ஊற்றப்படுகிறது. தற்போது கூடுதலாக நேற்று முதல் 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றப்படுகிறது. கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் 23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் என்றும் பசுமை மாறாக்காடாக அமைந்துள்ளது. இந்த காட்டு பகுதியில் வனவிலங்குகள் சரணாலயமும் பறவைகள் சரணலாயமும் உள்ளது. விலங்குகள் சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், நரி, குரங்கு, குதிரை, உடும்பு, மயில், காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த சரணாலயத்தில் உள்ள வனவிலங்குகளில் குடிதண்ணீர் தேவைக்காக காட்டு பகுதிகளில் 56 இடங்களில் இயற்கையான குளங்களும் மற்றும் செயற்கையாக 10 இடங்களில் கட்டப்பட்ட தொட்டிகளும் வனத்துறையினரால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.