கோவை, மே21: கோவை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மே 23ம் தேதி எண்ணப்படுகிறது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான வசதிகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவான 2,504 மின்னனு வாக்கு இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 6 ஸ்டாரங்க் அறையில் 24 மணி நேரமும் தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மே 23ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கு கோவை மக்களவை தொகுதிக்கு 300 அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.