தங்க நகை திருடியவர் கைது

கோவை, மே 23: கோவை பெரிய கடைவீதியை சேர்ந்தவர் கமலநாதன் (42). இவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். கடையில் விளாங்குறிச்சியை சேர்ந்த சரவணன் (40) என்பவர் இந்த கடையில் நிர்வாகியாக இருந்தார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சிறிது சிறிதாக இவர் கடையில் இருந்த 660 கிராம் எடையிலான தங்க நகைகளை திருடியதாக தெரிகிறது. சமீபத்தில் இதை கண்டறிந்த கமலநாதன், இது தொடர்பாக பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இவரிடம் இருந்து 102 கிராம் எடையிலான தங்க நகைகள் மீட்கப்பட்டது.

இன்னும் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான 558 கிராம் எடையிலான தங்க நகைகள் மீட்க வேண்டியுள்ளது. சரவணன் திருடிய தங்க நகைகளை விற்று செலவு செய்துவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். நான் நகைகளை வைத்து ஜாலியாக செலவு செய்து வந்தேன். 6 மாதத்திற்கு மேலாகியும் தங்க நகைகள் திருடிய விவரம் என் கடை உரிமையாளருக்கு தெரியவில்லை. அதனால் தொடர்ந்து திருடி வந்தேன் என அவர் தெரிவித்தார். போலீசார் மீதமுள்ள தங்க நகைகளை மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.

The post தங்க நகை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.