ரூ.4 லட்சம் கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்

கோவை, மே 19: கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்தவர் சபானா (32). இவரிடம், ஆர்எஸ்புரம் சாமு காலனியை சேர்ந்த நகைக்கடை ஊழியர் சண்முக சுந்தரம் (39) என்பவர் ரூ.4 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சண்முக சுந்தரம் பிரகாசம் பேருந்து நிறுத்தம் அருகே மாரியம்மன் கோயில் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சபானா தான் கொடுத்த ரூ.4 லட்சத்தை திரும்ப கேட்டார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சண்முகசுந்தரம் தகாத வார்த்தைகளால் பேசி சபானாவை தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சபானா அளித்த புகாரின் பேரில் கடைவீதி போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சண்முகசுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ரூ.4 லட்சம் கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: