போத்தனூர் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை

கோவை, மே 21: கோவை போத்தனூர், செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் மகன் ஜான்பிரிட்டோ(28). இவர் மீது போலீசில் கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு ஜான்பிரிட்டோ சினிமாவிற்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்த போது, நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த கொலை

சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: