அணையில் மூழ்கி வாலிபர் சாவு

கோவை, மே 21:  கோவை அம்மன் குளம் ஏரி மேடு பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் மகன் கிருஷ்ணகுமார் (21). இவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.நேற்று முன் தினம் மாலை இவர் கோவைக்கு வந்து கொண்டிருந்தார்.வழியில் வாைளயார் அணைக்கு சென்ற கிருஷ்ணகுமார் நீரில் இறங்கி குளித்தார். ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார். இது குறித்து கஞ்சிக்ேகாடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. பாலக்காட்டில் இருந்து நீரில் மூழ்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு சடலத்தை மீட்டனர். வாளையார் அணையின் சேறு, சகதி, சுழல் உள்ளது.  இங்கே குளிப்பது ஆபத்தான என பொதுப்பணித்துறை நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பு வைத்துள்ளது. ஆனால் தடையை மீறி சுழல் நீரில் குளிப்பதால் உயிரிழப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வாளையார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: