மூணாறு,மே 21: மூணாறு அருகில் பழைய மூணாறு பகுதியில் தனியார் சுற்றுலா விடுதிக்கு அருகே 10 பேர் அடங்கிய கும்பல், காடுகளை வெட்டி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். தகவலறிந்து தேவிகுளம் துணை கலெக்டர் வருவதை அறிந்த கும்பல் தலைமறைவானது. மூணாறில் சில நில மாஃபியா கும்பல்கள், அரசு நிலங்களை ஆக்கிரமித்த வருகின்றன. நேற்று பழைய மூணாறு பகுதியில் தனியார் விடுதிக்கு அருகில் பட்டப்பகலில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை வெட்டி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக தேவிகுளம் துணை கலெக்டர் ரேணுராஜூக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு அவரும், வருவாய் துறை அதிகாரிகளும் விரைந்தனர். அவர்களைக் கண்ட 10 பேர் கொண்ட கும்பல் தலைமறைவானது.