சிவகங்கை, மே 21: சிவகங்கையில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் சுரேஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கையில் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2019-2020ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. குரலிசை(வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், தவில், நாதஸ்வரம், தேவாரம், மிருதங்கம், வயலின் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம். 12 முதல் 30 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் பிரிவுகளில் சேர 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதஸ்வரம் வகுப்புகளில் சேர கல்வித்தகுதி தேவை இல்லை.