5 டன் பிளாஸ்டிக் குப்பை அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

ஆத்தூர், மே 21:  ஆத்தூர் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட, 5 டன் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள், அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆத்தூர் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை நகராட்சி ஊழியர்களை கொண்டு பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கும் பணி, நகராட்சி பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. மக்காத குப்பைகளில் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் கழிவுகள், சுமார் 5 டன் அளவில் அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு, நகராட்சியின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் சுகாதார அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்ட சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: