சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி

சேலம், மே 21: சேலம் அல்லிக்குட்டை ஜவகர்நகரை சேர்ந்தவர் பரமசிவம் (40). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 17ம் தேதி அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த பரமசிவத்தை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: