முத்துப்பேட்ைடயில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை

முத்துப்பேட்டை, மே 21: முத்துப்பேட்டையில் குடும்பத்தகராறில் பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்துகொண்டார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் மணல்மேட்டை சேர்ந்தவர் சோமநாதன் மனைவி சரோஜா(52). இவர் கடந்த 15ம் தேதி குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக வீட்டில் இருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன் உறவினர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரோஜா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்ட சரோஜா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட சரோஜாவுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

Related Stories: