பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2,021 குவிண்டால் பச்சை பயறு ரூ.1.40 கோடிக்கு கொள்முதல்

பாபநாசம், மே 21: பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2,021 குவிண்டால் பச்சை பயறு ரூ.1.40 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது. பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பச்சை பயறு கொள்முதல் கடந்த மாதம் 4ம் தேதி துவங்கி கடந்த 14ம் தேதி வரை நடந்தது. பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 135 விவசாயிகளிடம் 2,021 குவிண்டால் பச்சைப்பயறு ரூ.1 கோடியே 40 லட்சத்து 96,475க்கு கொள்முதல் செய்யப் பட்டது. பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி, தஞ்சை விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு, வேளாண் துறை இணை இயக்குனர் சுரேஷ்பாபு பங்கேற்றனர்.

Related Stories: