நெடுவயலில் கிணற்றில் விழுந்த காளை தீயணைப்புதுறையினர் உயிருடன் மீட்டனர்

பொன்னமராவதி,மே21: சிவகங்கை மாவட்டம் நெடுவயலில்  மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் கருப்புக்குடிப்பட்டி முத்து என்பவரது காளை பங்கேற்று விட்டு ஊர் திரும்பியது. அப்போது அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் தடுமாறி விழுந்துள்ளது. இதையடுத்து பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு நிலையஅலுவலர் தியாகராஜன் தலைமையில் தீயணைப்பு படையினர் வந்து 35அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் விழுந்து கிடந்த மஞ்சுவிரட்டு காளையினை பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

Related Stories: