தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக விழா

ஆரல்வாய்மொழி, மே 19: தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா மற்றும் மலர் முழுக்கு விழா  நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. 8.30 மணியளவில் பக்தர்கள் காக்கும் விநாயகர் கோயிலில் இருந்து பால் குடங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய தீர்த்த குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். பகல் 11.30 மணிக்கு செக்கர்கிரி வேலவனுக்கு அபிஷேகங்களும், தொடர்ந்து அபிஷேக தீபாராதனையும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பகல் 1.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணி முதல் 9 மணி வரை அன்னதானம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மலர் முழுக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு மலர் முழுக்கு தீபாராதனை நடைபெற்றது.

Related Stories: