சேந்தமங்கலத்தில் பலத்த காற்று இடியுடன் மழை

சேந்தமங்கலம், மே 17:  சேந்தமங்கலம் மற்றும் காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளில், நேற்று மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது.  இதனால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. காளப்பநாயக்கன்பட்டியிலிருந்து கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலையில், 7-வது வார்டில் சாலையோர வேப்ப மரம் முறிந்து அருகில் இருந்த மின்கம்பம் மீது விழுந்தது. இதை தொடர்ந்து மின்வாரியத்துறையினர் விரைந்து வந்து மரம் மற்றும் கம்பத்தை அகற்றினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் குப்பநாயக்கனூர், அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நீர் தேங்கியது.

Related Stories: