காளையார்கோவில், மே 15: காளையார்கோவிலில் தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தபால் அலுவலகம் அருகில் பல வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட வேளாண் அலுவலர் குடியிருப்புக் கட்டிடம் எந்த பயன்பாடுமின்றிச் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. காளையார்கோவிலில் தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தபால் அலுவலகம் அருகில் வேளான் அலுவலர் குடியிருப்புக் கட்டிடம் பல வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டு சில காலம் பயன்பாட்டில் இருந்தது. தற்போது எந்த பயன்பாடும் இல்லாமல் புதர்மண்டித் தனி நபரின் சாக்குக் குடோனாகவும், இரவுநேர பாராகவும் விஷபூச்சிகளின் இருப்பிடமாகவும் உள்ளது.