குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் 21ம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு

குமாரபாளையம், மே 15:குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 21ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் கண்ணன் கூறுகையில், குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் நடப்பாண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 21ம் தேதி நடக்கிறது. பிஏ தமிழ், ஆங்கிலம், பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், பிகாம், பிபிஏ உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் அசல் சான்றிதழ்களுடன் காலை 9.30 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: