பொன்னமராவதி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட டிப்பர் லாரி பறிமுதல்

பொன்னமராவதி, மே 15: பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரியினை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பொன்னமராவதி பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக  புதுக்கோட்டை கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து பொன்னமராவதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொன்னையூரில் வந்த ஒரு மணல் லாரியினை மடக்கி சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி மணல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து டிப்பர் லாரியினை பறிமுதல் செய்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: