காரைக்கால், மே 15: காரைக்காலில் இயங்கும் கடை மற்றும் நிறுவன உரிமத்தை, மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் உடனே பதிவு செய்துகொள்ள வேண்டும் என, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இயங்கும் கடைகள் மற்றும் அவற்றை சார்ந்த அலுவலகங்கள், கிடங்குகள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனை, தனியார் கல்லூரிகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள், விவசாய பண்ணைகள் உள்ளிட்டவை, புதுச்சேரி கடை மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1964 கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். என புதுச்சேரி தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் தெரிவித்துள்ளார்.