பாபநாசம் அரசு மருத்துவமனையில் மூட்டு வலிக்கான மருத்துவ முகாம்

பாபநாசம், மே 14: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தமிழக அரசின் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் சார்பில் பாபநாசம் அரசு மருத்துவமனையில் மூட்டு வலிக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குமுதா லிங்கராஜ் மேற்பார்வையில் பாபநாசம் அரசு மருத்துவமனை தலைமை குடியுரிமை மருத்துவர் குமரவேல் முன்னிலை வகித்தார். முகாமில் டாக்டர்கள் பாரதி, முரளி, வாசுதேவன், சிவபாரதி, தங்கதுரை, சுசிந்திரன், இந்திய செஞ்சிலுவை சங்க பாபநாசம் தலைவர் அமீர் ஜான் பங்கேற்றனர். முகாமில் 240 நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 31 பேர் மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.

Related Stories: