புதுக்கோட்டை,மே 14: புதுக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதியில் நடக்கும் குற்றசம்பவங்களை தடுக்க அனைத்து பகுதிகளிலம் சிசிடிவி கேமரா பொருத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை நகர் பகுதியில் காவல் துறையினர் சிசிடிவி கேமாரா பொருத்தி தொடர் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக புதிய பேருந்து நிலையம், கீழ ராஜ வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி சிசிடிவி கேமரா பொருத்துப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இவைகள் போதுமானதாக இல்லை. பெருகி வரும் சமூக குற்றங்களை தடுக்கும் வகையில் நகர் மற்றும் புறநகர் வார்டுபகுதிகளான நரிமேடு, சமத்துவபுரம், அடப்பன்வயல், விஸ்வாஸ்நகர், இறைவன் நகர், கோவில்பட்டி, திருகோகர்ணம், திருவப்பூர், மாலையீடு, ராஜகோபாலபுரம், கலீப்நகர், ராம்நகர், காந்திநகர், போஸ்நகர், காமராஜபுரம், அசோக்நகர், மேட்டுப்பட்டி, மச்சுவாடி, புதுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக விரோத செயல்கள் செயின் பறிப்பு போன்ற அனைத்து சம்பவங்கள் நடந்தேறிவருகிறது. தனிமனிதனின் உயிர் பாதுகாப்பு உடமை பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்களும் இளம்பெண்கள் மற்றும் பெண்களும் உரிய பாதுகாப்பு இன்றி அச்ச உணர்வோடு வழந்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.