பூட்டிய வீட்டில் கொள்ளை

காரைக்குடி, மே 10: காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி கண்டனூர் சாலை, ஐஸ்கேணி வீதியை சேர்ந்தவர் வில்லு பாண்டியன் மனைவி கிருபாகரி (69). இவர் தனது மூத்த மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு ஆந்திரா சென்றுவிட்டார். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 4 கிலோ  வெள்ளி பொருட்கள், கேமரா, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: