கறம்பக்குடி, மே 9: மலேசியாவில் நடந்த விபத்தில் இறந்த வாலிபரின் உடல், சொந்த ஊரான வளன்கொண்டான் விடுதிக்கு வந்தது. கறம்பக்குடி மலையூர் அருகே உள்ள வளன்கொண்டான் விடுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் பார்த்தீபன் (25). இவர் கடந்த 6 ஆண்டுகளாக மலேசியா தலைநகர் கோலாலம்பூர் பகுதியில் உள்ள பஸ்க்கர் என்ற இடத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த 5ம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி பார்த்தீபன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பார்த்தீபன் தந்தைக்கு மலேசியாவிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.