ராமநாதபுரம், மே 9: மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி வருண ஜெப வேள்வி நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் போதிய மழையின்றி வறட்சி நிலவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழை இல்லை. கண்மாய் குளங்கள் வறண்டுவிட்டன. கிராமங்களில் கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாநில இந்து சமய அறநிலையத்துறை நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த அறநிலையத்துறையின் கீழ் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.