கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

 

சிவகங்கை, மே 18: கடந்த ஏப்.29ல் தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது. இதில் தடகளம், கால்பந்து, கோ-கோ, கூடைப்பந்து, ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் காலை 6 மணி முதல் 8 வரையிலும் மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் நடைபெற்றது. அதில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதோர் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

The post கோடைகால பயிற்சி முகாம் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: