காய்கறி வியாபாரி ெகாலை வழக்கில் வேன் விற்பனை செய்த புரோக்கர்கள் 5 பேர் கைது

தேவகோட்டை, மே 19: தேவகோட்டையில் காய்கறி வியாபாரியை கொன்று வேனை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக புரோக்கர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். தேவகோட்டை ஜீவா நகரை சேர்ந்தவர் சேதுராஜ் மகன் பாண்டியராஜன் (38).காய்கறி வியாபாரி. இவர் கடந்த மார்ச் மாதம் சரக்கு வேனுடன் கடத்தப்பட்டு, முத்துநாட்டு கண்மாய் பகுதியில் கொல்லப்பட்டு கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இது தொடர்பாக பாண்டியராஜனின் நண்பர்கள் செல்வகுமார், ராஜா, கரண், கார்த்திக் பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘குடிபோதை தகராறில் பாண்டியராஜனை கொன்றுவிட்டு, வேனை கடத்திச் சென்று உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த அங்கமுத்துசாமி (28), ஆரிப் உசேன் (26) திருப்பூர் மடத்துக்குளத்தை சேர்ந்த சலீம்ராஜா (36), தேவகோட்டை அருகே தேரளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வபாண்டி (35), பசுபதி (30) ஆகியோர் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் 5 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து வேனை மீட்டனர். பாண்டியராஜன் கொலை தொடர்பாக மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

The post காய்கறி வியாபாரி ெகாலை வழக்கில் வேன் விற்பனை செய்த புரோக்கர்கள் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: