அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி தூக்குபோட்டு தற்கொலை

பொள்ளாச்சி, மே 9:  திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(63). இவர், பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கோவிந்தராஜ் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பின், கடந்த 26ம் தேதியன்று, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று கழிவறைக்கு செல்வதாக கூறிய அவர், வெகுநேரம் கடந்தும் திரும்பி வரவில்லை. அவர் எங்கு சென்றார் என தெரியாமல் உறவினர்கள் தவித்தனர்.

 

பின், மருத்துவமனையின் பல இடங்களில் தேடியும் அவரை காணாமல் அதிர்ச்சிடைந்தனர். பின், கழிவறை ஜன்னல் வழியாக பார்க்கும்போது, அங்கு கோவிந்தராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சிடைந்தனர்.  இதையறிந்த கிழக்கு ஸ்டேஷன் போலீசார், கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். போலீசார் தொடர்ந்த விசாரணையில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த கோவிந்தராஜ் வயிறு வலி தாங்க முடியாமல் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

Related Stories: