கோவை, மே 8: கோவை மாவட்டத்தில் பணியாற்றிய தாசில்தார்கள் 8 பேர், தேர்தலுக்கு முன்னதாக, நீதித்துறை பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 120 நாள் பயிற்சி முடித்த அவர்கள், மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பணியிடம் ஒதுக்கி, கோவை கலெக்டர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார். மேற்கு சுற்று வட்டச்சாலை மற்றும் மேட்டுப்பாளையம் புற வழிச்சாலைகள் திட்டத்தின் அலகு 2ல் தனி தாசில்தாராக முன்பு பணியாற்றிய ராஜா, அதே திட்டத்தின் அலகு 1ல் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை தெற்கு கோட்ட கலால் அலுவலராக முன்பு பணியாற்றிய விக்டர் ஆல்பிரட் புஷ்பராஜ், காலியாக இருக்கும் அதே பணியிடத்தில், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.