தஞ்சை, மே 8: தஞ்சை மாவட்டத்தில் வரும் 14ம் தேதி நடைபெறும் ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்தவும், டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மேம்படுத்தவும் அனைத்து பள்ளி வாகனங்களும் ஒரே இடத்தில் ஒரே நாளில் ஆய்வு செய்யப்படவுள்ளது.