தூத்துக்குடி, மே 8: தூத்துக்குடியில் முறையாக குடிநீர் விநியோகிக்க கோரி மாநகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள சத்யாநகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை கால்டுவெல் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பைப்லைன்கள் உடைந்து போனதால் கடந்த 2 ஆண்டுகளாக லாரிகள் வாயிலாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதிலும் தற்போது பல நாட்களாக லாரிகளில் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் ஒரே ஒரு லாரியில் குடிநீர் கொண்டுவந்து அனைத்து பகுதி மக்களும் குடத்துடன் வந்து பிடித்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதுவும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியது.