கத்தியைக் காட்டி மிரட்டல் காரைக்குடியில் 3 பேர் கைது

காரைக்குடி, மே 7: காரைக்குடியில் கத்தியைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியும்,  வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேரை காரைக்குடி அழகப்பபுரம் போலிசார் கைது செய்தனர். காரைக்குடியில் இரவு நேரங்களில் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி பொதுமக்களை சிலர் மிரட்டுவதாக, அழகப்பாபுரம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன்பேரில், போலீசார் ரோந்து சென்று, இது தொடர்பாக, அழகப்பாபுரத்தை சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்தி (32), நாராயணன் மகன் ரமேஷ், (33),  பாலசுப்பிரமணியம் மகன் பாலமுருகன் (33) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: