நாமக்கல், மே 7: நாமக்கல், கிறிஸ்து அரசர் ஆலயத்தில் புது நன்மை மற்றும் உறுதி பூசுதல், பட்டமளிப்பு விழா கொண்டாடப்பட்டது. இதற்கு சேலம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் சிங்கராயர் தலைமை வகித்து, திருச்சபை பணிகளில் ஈடுபடுவதற்காக 52 சிறுவர், சிறுமிகளுக்கு புது நன்மை மற்றும் உறுதி பூசுதல் பட்டமளித்தார்.