திருவாரூர், மே 7: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பெற்ற மகன்கள் மூவரும் தன்னை வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டதாக விவசாயி ஒருவர் கலெக்டரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி கோவிந்தராஜ் (65). இவரது மனைவி மேகலா உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து விட்ட நிலையில் தனது மகன்கள் உதயகுமார், மணிகண்டன், ரமேஷ் ஆகிய மூவருக்கும் கோவிந்தராஜன் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்து தன்னிடம் இருந்த 8 ஏக்கர் விவசாய நிலத்தையும் சரிசமமாக மூவருக்கும் பிரித்து கொடுத்துள்ளார்.