பொன்னமராவதி, மே 7: பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு நடந்தது. தமிழகத்தில் பருவமழை பெய்து நாடு செழிக்க இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் யாகம் நடத்த உத்திரவிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று 4ம் தேதி காலை முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் ஆகியவை மூலமாக சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.