பொள்ளாச்சி, மே 7: பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி 10வது வார்டில் அடிப்படை வசதிகோரி, பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 11 வார்டுகள் உள்ளன. ஆனால் இந்த வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு சக்தி விநாயகர் நகர் லேஅவுட்டில் கடந்த 15ஆண்டுகளாக போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவில்லை என்று இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த வார்டு பொதுமக்கள், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சூளேஸ்வரன்பட்டி 10வது வார்டுக்குட்பட்ட சக்தி விநாயகர் கோயில் லே அவுட் பொதுமக்கள் பலர் நேற்று, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு ஒன்றை தெரிவித்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ‘சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் சுமார் 15ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.